பல்கலை மாணவர்கள் இடையே மோதல் ; 10 பேர் கைது 

ஊவா வெல்லஸ்ஸ பல்கலை மாணவர்களிடையே மோதல் ; 10 பேர் கைது

by Staff Writer 12-11-2019 | 10:39 AM
Colombo (News 1st) பதுளை - ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்கும் 4 மாணவர்களைத் தாக்கியமை தொடர்பில் மூன்றாம் ஆண்டில் கல்விகற்கும் 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை, பதவிய, ஹொரணை, கடவத்தை, இரத்தினபுரி, பாதுக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் 10 பேரும் இன்று (12) பதுளை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.