MCC ஒப்பந்தத்திற்கு எதிரான மனு பரிசீலனை

MCC ஒப்பந்தத்திற்கு எதிரான மனுவைப் பரிசீலிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

by Staff Writer 11-11-2019 | 2:39 PM
Colombo (News 1st) Millennium Challenge Corporation ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதைத் தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் எதிர்வரும் 13ஆம் திகதி குறித்த மனு பரிசீலிக்கப்படவுள்ளது. பிரதம நீதியரசர் நியமிக்கும் நீதியரசர்கள் குழாமின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹாரே செயற்படவுள்ளார். L.T.B.n தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் குழாமிலுள்ள ஏனைய நீதியரசர்களாவர்.