by Staff Writer 11-11-2019 | 7:12 PM
Colombo (News 1st) விளையாட்டுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் இன்று (11) நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்றைய அமர்வில் சமர்ப்பித்துள்ளார்.
இன்றைய அமர்வின் விவாதத்துக்கு பின்னர் சட்டமூலத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.