இறம்பொடை நீர்வீழ்ச்சி சுற்றுலா வலயம் அபிவிருத்தி

இறம்பொடை நீர்வீழ்ச்சி சுற்றுலா வலயம் அபிவிருத்தி

by Staff Writer 11-11-2019 | 3:07 PM
Colombo (News 1st) இறம்பொடை நீர்வீழ்ச்சி சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த அபிவிருத்திப் பணிகளுக்கான நிதியினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த இடமாக இறம்பொடை நீர்வீழ்ச்சி விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.