ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு

by Staff Writer 10-11-2019 | 7:28 AM
Colombo (News 1st) 2005ஆம் ஆண்டு ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதியில் 19 வயதான இளைஞர் ஒருவர் கொலெ செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் அந்தனி ஜயமஹவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 2012 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டது. குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டருந்த ஜூட் அந்தனி ஜயமஹ, பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (09) மாலை சிறைச்சாலையிலிருந்து வௌியேறியதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.