800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

டெங்கு பரவும் வகையில் சூழல்; 800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

by Staff Writer 10-11-2019 | 9:38 AM
Colombo (News 1st) டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த சுமார் 800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுள்ளது. கடந்த வாரம் முழுவதும் நாடளாவிய ரீதியில் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் 60 000 இற்கும் அதிக பகுதிகள் பரிசோதிக்கப்பட்டதாக டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். இவற்றில் 30 வீதமான பகுதிகள், நுளம்புகள் பெரும் வகையில் இருந்தமை கண்டறியப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளில் 7 வீதமான பகுதிகளிலிருந்து டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 65 000 இற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.