இறால் வளர்ப்பை மேம்படுத்தத் திட்டம்

இறால் வளர்ப்பை மேம்படுத்தத் திட்டம்

by Staff Writer 10-11-2019 | 7:47 AM
Colombo (News 1st) நாட்டில் இறால் வளர்ப்பை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் வளர்க்கப்படும் இறால்களுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் கேள்வியைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்காக இறால் வளர்ப்பில் ஈடுபடுவோருக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் சலுகைகள் என்பன வழங்கப்படவுள்ளதாக அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.