அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் சிக்கி மூவர் பலி

அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் சிக்கி மூவர் உயிரிழப்பு

by Staff Writer 10-11-2019 | 11:38 AM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத் தீயில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். குயின்ஸ்லாந்து மற்றும் வேல்ஸின் தென் பிராந்தியத்தில் மூன்றாவது நாளாகவும் காட்டுத் தீ பரவிவருகின்றது. இதுவரை 100 இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 1300 தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.