ஈரானில் நிலநடுக்கத்தால் ஐவர் பலி

ஈரானில் நிலநடுக்கத்தால் ஐவர் பலி

by Bella Dalima 08-11-2019 | 5:44 PM
ஈரானில் வடமேற்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 300 பேர் காயமடைந்துள்ளனர். அசர்பைஜான் மாகாணத்தின் ஷஷ்ட்ரட் நகரில் இன்று அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் அப்பகுதியிலுள்ள மூன்று சிறிய கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.