by Staff Writer 07-11-2019 | 10:32 AM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் பரவகும்புக்க முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி சற்று நேரத்திற்கு முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக வீதியின் பரவகும்புக்கவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாரச்சி தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதி 40 கிலோமீற்றர் நீளம் கொண்டதாகும்.
பரவகும்புக்க, சூரியவெவ, மத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட நுழைவாயில்களின் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்க முடியும்.