சிறைச்சாலை அதிகாரி ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது

by Staff Writer 07-11-2019 | 9:55 AM
Colombo (News 1st) அகுணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை நுழைவாயிலுக்கு அருகில் போதைப்பொருட்களுடன் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சந்தேகநபரிடமிருந்து, 10 கிராம் ஹெரோயின், 14 கிராம் கஞ்சா மற்றும் 27 கிராம் போதைவில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதிகளுக்கு விற்பனை செய்வற்காக குறித்த அதிகாரி, போதைப்பொருட்களைத் தம்வசம் வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுன்றது. கைது செய்யப்பட்ட தங்காலை பகுதியைச் சேர்ந்த 32 வயதான சிறைச்சாலை அதிகாரி இன்று (07) அகுணுகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.