வயோதிபத் தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

கணேமுல்ல பகுதியில் வயோதிபத் தம்பதியினர் ஆயுதத்தால் தாக்கி கொலை

by Staff Writer 07-11-2019 | 9:28 AM
Colombo (News 1st) கணேமுல்ல - ஹொரகொல்ல பகுதியில் வயோதிபத் தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக நேற்றிரவு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 72 மற்றும் 73 வயதான வயதான இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.