இலங்கையில் வளி மாசடைவின் அளவு குறைவு

இலங்கையில் வளி மாசடைவின் அளவு குறைவு

by Staff Writer 07-11-2019 | 8:33 AM
Colombo (News 1st) கொழும்பு நகரம், வட மேல் மற்றும் வட மாகாணங்களின் வளிமண்டலத்தில் காணப்பட்ட தூசு துகள்களின் அளவு குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. வளியின் தர கண்காணிப்புக் கருவியின் பிரகாரம் வளியின் தரசுட்டி 120 ஆக குறைவடைந்துள்ளதாக ஆய்வகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்புக்கு அமைய, கொழும்பு நகரில் சாதாரணமான வளியின் தரசுட்டி 40 ஆக காணப்பட வேண்டிய நிலையில், நேற்றைய தினம் வளியின் தரசுட்டி 148 ஆக பதிவாகியுள்ளது. ஆசியாவின் பல நாடுகளில் இந்நாட்களில் இவ்வாறான நிலை காணப்படுவதாக சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். புதுடில்லியில் ஏற்பட்டுள்ள வளி மாசடைவில் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுவாச​ நோயாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.