by Staff Writer 07-11-2019 | 8:22 AM
Colombo (News 1st) அம்பாறை மாவட்டத்தில் கடலுணவுகளின் விலை அதிகரித்துள்ளது.
கிழக்கில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறைந்துள்ளதன் காரணமாகவே கடலுணவுகளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் கடலுணவுகளுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்படுகின்ற போதிலும், அவற்றின் பற்றாக்குறை காரணமாக விலை அதிகரித்துக் காணப்படுவதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.