கினிகத்ஹேனயில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்

S.B. திசாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்

by Bella Dalima 06-11-2019 | 10:11 PM
Colombo (News 1st) கினிகத்ஹேன - பொல்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் S.B. திசாநாயக்க பயணித்த வாகனத்தை வழிமறித்ததாகக் கூறப்படுகின்ற சம்பவம் காரணமாக அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். இன்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் S.B. திசாநாயக்கவின் வாகனம் அங்கிருந்து வௌியேறியுள்ளது.