வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்ல 1200 பஸ்கள் கோரல்

வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்ல 1200 பஸ்கள் ​கோரப்பட்டுள்ளன

by Staff Writer 06-11-2019 | 1:27 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பெட்டிகளைக் கொண்டு செல்வதற்காக சுமார் 1200 பஸ்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அத்துடன், அதிகாரிகளின் போக்குவரத்திற்காகவும் பஸ்கள் கோரப்பட்டுள்ளதாக சபையின் பிரதி பொதுமுகாமையாளர் P.H.R.T. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக 16 000 இற்கும் அதிகமான அரச மற்றும் தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.