முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு

by Staff Writer 06-11-2019 | 1:32 PM
Colombo (News 1st) புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக தேசிய கொள்கை, பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்பிரகாரம், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்த 20 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்கனவே, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த 65 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.