வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

by Staff Writer 06-11-2019 | 7:48 AM
Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர்களும் தேர்தலில் களமிறங்கியுள்ள கட்சிகளின் செயலாளர்களும் இன்று (06) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கல்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்தும் இன்று கலந்துரையாடப்படவுள்ளது.