வாக்குச்சீட்டு அச்சிடும் பணி நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணி நிறைவு

by Staff Writer 06-11-2019 | 8:33 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அனைத்தும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச்சீட்டுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏனைய ஆவணங்களை அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.