தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடும்

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

by Staff Writer 05-11-2019 | 3:46 PM
Colombo (News 1st) வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு அந்தமான் கடற்பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு கடற்பிராந்தியங்களில் நிலவும் தாழமுக்கம் எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் வடமேல் திசையை நோக்கி செல்லக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலை எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக இந்த கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் காரணமாக மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.