ஷாந்த சிசிர குமாரவிற்கு விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த சிசிர குமாரவிற்கு விளக்கமறியல்

by Staff Writer 05-11-2019 | 4:02 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த சிசிர குமார எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிலாபம் மேல் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலாபத்தில் 2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றின் உறுப்பினராக பங்கேற்ற போது, துப்பாக்கி மற்றும் ரவைகளை வைத்திருந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இரண்டாவது சந்தேகநபராக ஷாந்த சிசிர குமார பெயரிடப்பட்டுள்ளார். பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் ஷாந்த சிசிரகுமார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.