by Staff Writer 05-11-2019 | 12:30 PM
Colombo (News 1st) நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதி கருதி 4 விசேட ரயில்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 8, 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் குறித்த ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
குறித்த நாட்களில் கொழும்பு - கோட்டையிலிருந்து இரவு 7.35 மணிக்குப் புறப்படவுள்ள ரயில், அதிகாலை 4.33 மணிக்கு பதுளையை சென்றடையவுள்ளது.
அதேநேரம், பதுளையில் இருந்து இரவு 8 மணிக்குப் புறப்படவுள்ள ரயில், அதிகாலை 5.26 மணிக்கு கொழும்பு - கோட்டையை அண்மிக்கும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.