by Staff Writer 04-11-2019 | 8:05 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று (04) மேலும் 15 கட்சிகள் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவும் கலந்து கொண்டிருந்தார்.
நுகோகொடை - மிரிஹான பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் ஜனாதிபதித் தேர்தல் அலுவலகத்தில் இன்று முற்பகல் இதற்கான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் மகா சபை
ஸ்ரீ ரெலோ கட்சி
இலங்கை மக்கள் தேசியக் கட்சி
மக்கள் சேவையாளர் கட்சி
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி
இந்திய வம்சாவளி மக்கள் கட்சி
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
தேசபற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி
முற்போக்கு மக்கள் கட்சி
தேசிய முன்னணி
ஐக்கிய ஜனநாயக மக்கள் கட்சி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி
தேசபற்றுள்ள முற்போக்கு மக்கள் முன்னணி
இஸ்லாமிய சோசலிச முன்னணி மற்றும்
ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.