சுமூகமாக முடிவடைந்த இன்றைய தபால் மூல வாக்களிப்பு

ஜனாதிபதித் தேர்தல்: சுமூகமாக முடிவடைந்த இன்றைய தபால் மூல வாக்களிப்பு

by Staff Writer 04-11-2019 | 5:25 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் சுமூகமான முறையில் இடம்பெற்றதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (04) முற்பகல் 8.30 மணிக்கு ஆரம்பமாகிய தபால் மூல வாக்களிப்பு மாலை 4.15 மணிக்கு நிறைவடைந்துள்ளது. பொலிஸ் திணைக்களம், மாவட்ட மற்றும் தேர்தல் செயலக அதிகாரிகள் இன்று வாக்களிப்பில் ஈடுபட்டனர். இன்று தபால்மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு நாளை (05) அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான முதல்கட்ட தபால் மூல வாக்களிப்பு கடந்த 31 ஆம் திகதியும் இம்மாதம் முதலாம் திகதியும் நடைபெற்றது. இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 6 59 504 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.