கடற்படையால் 200 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது?

கடற்படையால் 200 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது?

by Staff Writer 04-11-2019 | 1:44 PM
Colombo (News 1st) இலங்கையின் தென் கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் இலங்கைப் பிரஜைகள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்டகால மீன்பிடியில் ஈடுபடும் படகிலிருந்து நேற்றைய தினம் 200 கிலோகிராமுக்கும் அதிக தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. காலி கடற்பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகத்திற்கிடமான படகை சோதனையிட்டபோதே, குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருளை கடல் மார்க்கமாக நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு முயற்சித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட படகுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 739 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.