தொடரும் மழையுடனான வானிலை

தொடரும் மழையுடனான வானிலை

by Staff Writer 03-11-2019 | 7:11 AM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வட மேல் மாகாணங்களில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, காங்கேசன்துறை முதல் திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் கூறப்படுகின்றது.