களுத்துறையில் ஆயிரம் வீட்டுத் தோட்டங்கள்

களுத்துறையில் ஆயிரம் வீட்டுத் தோட்டங்கள்

by Staff Writer 03-11-2019 | 1:10 PM
Colombo (News 1st) களுத்துறை மாவட்டத்தில் ஆயிரம் வீட்டுத்தோட்டங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தின் விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது. நச்சுத்தன்மையற்ற மரக்கறிகள் மற்றும் பழச்செய்கையில் ஈடுபடும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையாளர்களின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இயற்கை உர உற்பத்தி மற்றும் பாவனை தொடர்பில் அவர்களுக்கு தௌிவூட்டவுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலகத்தின் விவசாயப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.