நுகேகொடையை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

நுகேகொடையை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

by Staff Writer 02-11-2019 | 3:34 PM
Colombo (News 1st) நுகேகொடையை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் காரணமாக நுகேகொடை மேம்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்தார்.