நல்லிணக்கத்துடன் வாழ எதிர்பார்க்கின்றோம்: மகேஷ் சேனாநாயக்க

by Staff Writer 02-11-2019 | 9:05 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கிழக்கு மாகாணத்தில் நேற்று (01) பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மட்டக்களப்பு நகரில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து மக்களை தௌிவுபடுத்தினார். இதன்போது,
71 வருடங்களுக்கு முன்னரே ஆட்சியாளர்கள் எங்களை சிங்கள, தமிழ், முஸ்லிம் என பிரித்தனர். இதனைத் தான் எமது ஆட்சியாளர்கள் செய்துள்ளனர். எமது ஆட்சியின் கீழ் ஒரு நாடு என்ற வகையில் நல்லிணக்கத்துடன், ஒரே இனமாக இலங்கையர் என்ற வகையில் வாழ்வதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அதற்காகத்தான் நாங்கள் இந்த ஆணையைக் கேட்கின்றோம். அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படாதவாறு செயற்படுவதற்கும், மக்களின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கும் தான் நான் எதிர்பார்க்கின்றேன். இந்த தேர்தலின் பின்னர் நாங்கள் மக்களுடன் பொதுத்தேர்தல் வரை செயற்படுவோம். அனைத்து தேர்தல்களிலும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுவோம்.