10ஆம் திகதி முதல் இந்தியாவிற்கு நாளாந்த விமான சேவை

10 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, திருச்சிக்கு நாளாந்த விமான சேவை

by Bella Dalima 01-11-2019 | 4:01 PM
Colombo (News 1st) 10 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, திருச்சிக்கு நாளாந்த விமான சேவை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கான நாளாந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் வர்த்தக போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்திய விமான சேவை நிறுவனம் ஒன்றினால் யாழ்ப்பாணத்திற்கும் சென்னை மற்றும் திருச்சிக்கும் இடையில் விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம் சி. நிமல்சிறி குறிப்பிட்டார். மேலும், வாரத்திற்கு மூன்று தடவைகள் யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு விமான சேவையை முன்னெடுப்பதற்கு இலங்கையிலுள்ள விமான நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.