பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் பூர்த்தி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் பூர்த்தி

by Staff Writer 01-11-2019 | 9:51 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நிகழ்வொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு வருகை தந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ கட்சி செயற்பாட்டாளர்களினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் மூன்று வருட பூர்த்தி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.