போதைப்பொருள் சோதனையில் ரோபோக்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் சோதனையில் ரோபோக்கள்

by Bella Dalima 01-11-2019 | 4:10 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் சோதனைக்காக 2 ரோபோக்கள் இன்று முதல் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு ரோபோக்களும் சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்டவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். வரலாற்றில் முதற்தடவையாக போதைப்பொருள் சோதனைக்காக ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.