by Bella Dalima 30-10-2019 | 4:34 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 13,283 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் 8,319 வழக்குகள் தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, சிரேஷ்ட சட்டத்தரணி நிரோஷா ஜயரத்ன இந்த விடயங்களை அறிவித்துள்ளார்.