விஞ்ஞாபனங்களில் சூழல் பிரகடனமும் இருக்க வேண்டும்

வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களில் சூழல் பிரகடனமும் உள்ளடக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தல்

by Staff Writer 29-10-2019 | 5:56 PM
Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பிரகடனத்தை தௌிவாகக் குறிப்பிட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இன்று முற்பகல் நடைபெற்ற ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்களால் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளில் சூழல் பிரகடனமும் உள்ளடக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். சுற்றுச்சூழல் அழிவடைவதால் மனிதர்கள் உள்ளிட்ட விலங்கினங்களும் அழிவடைவதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, சூழலை பாதுகாப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு என்பதுடன் அவர்களின் பிரதான பணி எனவும் குறிப்பிட்டுள்ளார்.