இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்

வவுனியாவில் இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: பிள்ளைகள் உயிரிழப்பு

by Staff Writer 29-10-2019 | 4:50 PM
Colombo (News 1st) வவுனியா - நெடுங்கேணி பகுதியில் 2 மற்றும் 3 வயது பிள்ளைகளுடன் தாய் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன்போது, இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட தாய் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணின் கணவர் வாகன விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.