லொஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ; மக்களுக்கு எச்சரிக்கை

லொஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ; மக்களை வௌியேறுமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 29-10-2019 | 12:02 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்திலுள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேகமாகப் பரவிவரும் காட்டுத் தீயிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஆரம்பித்த காட்டுத் தீ மிக வேகமாகப் பரவி வருகின்றது. தீ இதுவரை 500 ஏக்கர்கள் வரை பரவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், கலிபோர்னியாவில் காட்டுத் தீ காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.