by Staff Writer 29-10-2019 | 7:48 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணதில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை சுற்றுலா மற்றும் நலன்புரி முகாமைத்துவ நிறுவனம், அங்கு ஹோட்டல் முகாமைத்துவக் கற்கை நெறியை ஆரம்பிக்கவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பலாலி சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஹோட்டல் முகாமைத்துவக் கற்கை நெறி தொடர்பான தமது கிளையொன்றை யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா மற்றும் நலன்புரி முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனூடாக, வட மாகாணத்தில் சுற்றுலாத்துறை தொடர்பில் பயிற்றப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.