மரண தண்டனைக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

மரண தண்டனைக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

by Staff Writer 29-10-2019 | 11:42 AM
Colombo (News 1st) மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (29) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடிப்பதாக புவனேக அலுவிஹாரே, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதியரசர்கள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.