யாழில் தனியார் பஸ்ஸொன்று எரியூட்டப்பட்டுள்ளது

யாழில் தனியார் பஸ்ஸொன்று எரியூட்டப்பட்டுள்ளது

by Fazlullah Mubarak 28-10-2019 | 11:06 AM

யாழ். சிறுபிட்டி பகுதியில் தனியார் பஸ்ஸொன்று எரியூட்டப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறினால் பஸ்ஸில் பணிபுரியும் பஸ் நடத்துநர் நேற்றிரவு பஸ்ஸூக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பஸ் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பஸ்ஸூக்கு தீ வைத்த சிறுபிட்டியை சேர்ந்த 22 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.