மஹிந்தானந்த மீதான வழக்கு: சாட்சி விசாரணை தாமதம்

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைகள் ஒத்திவைப்பு

by Staff Writer 28-10-2019 | 4:15 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து இன்று (28) உத்தரவிட்டுள்ளார். அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் முறையற்ற வகையில் சேகரித்த 27 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி, பொரளை கிங்சி வீதியில் சொகுசு வீடொன்றைக் கொள்வனவு செய்தமையூடாக நிதிதூய்தாக்கல் சட்டத்தின் கீழ் குற்றமிழைக்கப்பட்டுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையின் போது, மஹிந்தானந்த அளுத்கமகே மன்றில் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கின் 6 சாட்சியாளர்களையும் அடுத்த வழக்கு விசாரணையின்போது மன்றில் ஆஜராகுமாறு இதன்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி உத்தரவிட்டுள்ளார்.