பல மாவட்டங்களுக்கு பலத்த மழை பெய்யும் - வானிலை

பல மாவட்டங்களுக்கு பலத்த மழை பெய்யும் - வானிலை

by Fazlullah Mubarak 28-10-2019 | 10:44 AM

Colombo (News 1st) வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 150 முதல் 200 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் நுவரெலியா, பதுளை, மாத்தளை மாவட்டங்களிலும் தென், வட மேல் மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசும் எனவும் மின்னல் தாக்கங்களில் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு ஒருநாள் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் சிறு மீன்பிடியாளர்களுக்கும் கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடாவில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களும் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.