பட்டாசு வெடித்ததில் மஸ்கெலியாவில் ஒருவர்  பலி

பட்டாசு வெடித்ததில் மஸ்கெலியாவில் ஒருவர் பலி

by Fazlullah Mubarak 28-10-2019 | 10:48 AM

மஸ்கெலியா - கவரவில பொதுவிளையாட்டு மைதானத்தில் பட்டாசு வெடித்ததில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 10.30 மணியளவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியொன்றின் போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பட்டாசை கொளுத்திய சந்தர்ப்பத்தில் குறித்த நபர் காயமடைந்ததுடன், மஸ்கெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். ஸ்ட்ரெஸ்பி தோட்டத்தை சேர்ந்த 40 வயதான ஒருவரே பட்டாசு வெடித்ததில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.