நாடு திரும்பினார் மைத்திரி

நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரி

by Fazlullah Mubarak 28-10-2019 | 10:55 AM

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளார்.

ஜப்பானிய பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி, கடந்த 21 ஆம் திகதி ஜப்பானுக்கு பயணமானார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அந்நாட்டின் முன்னாள் பிரதமர் யஷூவோ பக்குடாவை சந்தித்து கலந்துரையாடினார்.