by Staff Writer 28-10-2019 | 7:39 PM
Colombo (News 1st) இலங்கையில் திரவ பால் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் விவசாயத் திணைக்களம் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
இதற்கிணங்க, திரவ பால் உற்பத்தியை மேம்படுத்த 14 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டாகும்போது தேசிய திரவ பால் உற்பத்தியை 94 வீதம் வரை அதிகரிப்பதுடன், 15000 விவசாயக் குடும்பங்களை திரவ பால் உற்பத்தி கைத்தொழிலில் உள்ளீர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.