சஜித் பிரேமதாசவின் இளையோர் பிரகடனம் வௌியீடு

by Staff Writer 28-10-2019 | 7:14 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் இளையோர் பிரகடனம் இன்று (28) வௌியிடப்பட்டுள்ளது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இதற்கான நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பெருந்திரளான இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, இளைஞர்களுடன் சஜித் பிரேமதாச சில இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நாட்டின் வரலாற்றில் முதல்தடவையாக ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் இளையோருக்கான பிரகடனத்தைத் தான் வௌியிட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன், நிகழ்வில் கூடியிருந்த சகோதர, சகோதரிகளுடன் இந்தக் கொள்கைப் பிரகடனத்தில் கைசாத்திட்டு அதில் காணப்படக்கூடிய சமூக இணக்கப்பாடுகளை ஜனாதிபதியாகி 3 மாதங்களுக்குள் பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய இந்த நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய அதிகபட்ச பலன்களை தான் பெற்றுக் கொடுப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதன்போது உறுதி வழங்கியுள்ளார்.