குடு திலீபவிற்கு விளக்கமறியல்

குடு திலீபவிற்கு விளக்கமறியல்

by Staff Writer 28-10-2019 | 6:20 PM
Colombo (News 1st) பிரபல பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான 'குடு திலீப' எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'குடு திலீப' பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர் என கிடைத்துள்ள தகவலுக்கு அமைய விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதிமன்றத்தில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 2 துப்பாக்கிகள், 2 கத்திகளுடன் 'குடு திலீப' குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (27) அதிகாலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்