ரனால திலீப வெல்லம்பிட்டிய பகுதியில் கைது

ரனால திலீப வெல்லம்பிட்டிய பகுதியில் கைது

by Fazlullah Mubarak 27-10-2019 | 3:45 PM

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஹெரோயின் கடத்தல்காரரும் கப்பம் பெறும் குழு உறுப்பினருமான ரனால திலீப வெல்லம்பிட்டிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் மற்றும் வாயு துப்பாக்கியொன்றுடன் சந்தேநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 29 வயதான ரனால திலீப என அழைக்கப்படும் திலீப் தரங்க ஹெட்டியாரச்சி நாகஹமுல்ல பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.