யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

by Fazlullah Mubarak 27-10-2019 | 3:28 PM

யாழ்ப்பாணம் - ஐந்துசந்தி பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வசமிருந்து 4 கிலோ 232 கிலோகிராம் கேரள கஞ்சாவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். வடக்கு கடற்படைக் கட்டளை மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மோட்டார்சைக்கிள் மற்றும் கேரள கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ். பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.