தேர்தல் தொடர்பிலான 69 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் தொடர்பிலான 69 முறைப்பாடுகள்பதிவு

by Fazlullah Mubarak 27-10-2019 | 3:24 PM

கடந்த 24 மணித்தியாலங்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான 69 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 66 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 1835 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.