by Staff Writer 26-10-2019 | 5:12 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - தென்மராட்சி, இயற்றாளை பகுதியில் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிறிய குளமொன்றில் தவறி வீழ்ந்து நேற்றைய தினம் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இயற்றாளையச் சேர்ந்த கந்தையா சுகிந்தன் எனும் 34 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக சிறிய குளங்கள் மற்றும் கேணி உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், குறித்த இளைஞர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
சடலம் மீதான பிரேதப் பரிசோதனை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.